அம்பாறையில் 3 வது மாடியில் இரகசியமாக கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி!
அம்பாறையில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்திலே இன்று வியாழக்கிழமை (17-03-2022) இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[
]
மேலும் இந்த கைது சம்பவத்தின் போது இரண்டு கஞ்சா செடிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ள இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரை கைது செய்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.