இலங்கையில் தேர்தல் தொடர்பில் பந்துல குணவர்தன வெளியிட்ட அதிரடி தகவல்
இலங்கையில் எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அடுத்த வருடம் உரிய நேரத்தில் அனைத்து தேர்தல்களும் இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்றைய தினம் (05.09.2023) இடம்பெற்றது. இதன்போது 'பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமை' தொடர்பில் வினவிய போது அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது.
அவ்வாறான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதில் எவ்வித சந்தேகங்களையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
அடுத்த வருடம் அனைத்து தேர்தல்களும் உரிய நேரத்தில் நடாத்தப்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.