உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் செவ்வாய்க்கிழமை (03) இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள் பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி பரீட்டார்த்திகள் தங்கள் பெறுபேறுகளைப் பார்க்கலாம் என்றும் திணக்கள்ம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் பட்சத்தில் 1911 என்ற அவசர (Hotline) தொலைபேசி இலக்கத்தினூடாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் விண்ணப்பதாரரைக் கேட்டுக் கொண்டது.