பாலியல் புகாரில் சிக்கிய பிரபல மலையாள பட நடிகர்! இவருமா?
மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது.
இதன்படி, கேரளாவில் முன்னணி நடிகர்கள் பாலியல் முறைப்பாடுகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நேரம் படம் மூலம் அறிமுகமான நிவின் பாலி பின்பு பிரேமம், ரிச்சி என்ற படம் மூலம் பிரபலமடைந்தார்.
இதையடுத்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார்.
இப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்ட நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.