துள்ளுவதோ இளமை ; நடிகர் அபிநய் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்
நடிகர் அபிநய் இன்று (10) காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர் அபிநய் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அபிநய் கடந்த 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

திரைத்துறையினர் இரங்கல்
அத்துடன் சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ ஆகிய திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணி குரல் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நடிகர் அபிநய்யின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.