தொடர் வெடிப்பு சம்பவங்கள்; எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் இந்த வெடிப்பு சம்பவங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , இதுவரை பதிவான வெடிப்பு சம்பவங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்குச் சேதம் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ,
சமையல் அடுப்புகள் மற்றும், எரிவாயு குழாய்களுக்கே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.