கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்: மூவர் வைத்தியசாலையில்!
Srilanka
Police
Accident
Bandaragama
By Shankar
பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதியதில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து சம்பவம் பண்டாரகம - கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல, நரிகந்த பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டிக்கு முன்னே சென்ற கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த விபத்து அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US