இன்றுகாலை இடம்பெற்ற விபத்து; பூசகர் மருத்துவமனையில்
வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஆலய பூசகர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து குட்செட்வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளும் குட்செட் பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த கேதீஸ்வரன் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.