இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பஞ்சநாதன் குகேந்திரன் (வயது 49) என்ற நபரே மரணமடைந்தவராவார்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.