பாடசாலை மாணவனின் உயிரைப்பறித்த விபத்து
வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கல்முனை, மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்முனை மட்டக்களப்பு வீதியில் நாவக்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிள் வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சுங்கவில, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வேன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.