கொழும்பில் இடம் பெற்ற விபத்து
கொழும்பில் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்ததுடன் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம்
குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்பாகச் சென்று முச்சக்கரவண்டியுடன் மோதி உள்ளது.
இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.