60 சதவீத பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையின் கிராமப்புறங்களில் வசிக்கும் 100 பெண்களில் சுமார் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திஸாநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றார். மகளிர் பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 500 பெண் குடும்பத் தலைவர்கள் உள்ளனர்.
தேசிய சமாதானப் பேரவையின் ஊடாக செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவில் சிவில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனை போக்க பொலிஸ் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்களை மேம்படுத்தி, தற்போதுள்ள போதைப்பொருள் சட்டங்களை அதிகரித்து குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.