முல்லைத்தீவில் 20 வயதான இளைஞனை அதிரடியாக கைதுசெய்த பொலிஸார்!
முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (08-10-2023) முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும், இவரிடம் இருந்து 486 கொக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்று (08) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.