வெளிநாட்டிலுள்ள காதலி பேசாததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு
காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் தனது காதலி ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி மாமரத்தில் ஏறி தற்கொலை செய்துக் கொள்ள முயசித்துள்ளார்.
குவைத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவருடன் அக்மீமன ஹியாரே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுமார் ஒரு வாரமாக இவருடன் பழகிய பெண் பேசாமல் இருந்துள்ளார்.
இளைஞனின் விபரீத முடிவு
இதன் காரணமாக நாகியாதெனிய பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள 40 அடி மாமரத்தின் கிளையில் கயிற்றை எடுத்து அமர்ந்து தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
தான் காதலிக்கும் பெண் தன்னிடம் பேசாமல் இருந்தால் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் யக்கலமுல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சந்தன ஹேவகே சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.
நிலைமையை ஆராய்ந்துவிட்டு, வெளிநாட்டில் இருந்தவரை குறித்த நபருடன் தொலைபேசியில் இணைத்து, மரத்தில் இருந்து தரையில் இறக்கி, பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் இந்த நபரின் மனநிலையை பரிசோதிக்க மனநல மருத்துவரிடம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.