குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள யுக்திய நடவடிக்கை
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,184 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 59 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை (5) தெரிவித்துள்ளது.
தொடர் அதிரடியில் பொலிஸார்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 29 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதோடு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்த 84 சந்தேக நபர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை 23 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது 337 கிராம் ஹெரோயின், 242 கிராம் ஐஸ், 6 கிலோ 629 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குற்றச்சசெயல்களில் ஈடுபடுவோருக்கு பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.