கிளிநொச்சியில் பரபரப்பு; மணல் கடத்தல்காரர் மீது துப்பாகிச்சூடு
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி மற்றும் சந்தேகநபர்கள் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பரானது நிறுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளது.

கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் டிப்பர் வாகன சாரதி வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
