உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை கடலாமை(Photos)
புத்தளம் உடப்பு சின்னக்குளனி பகுதியில் இன்று (23) அதிகாலை அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச் சார்ந்ததென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த கடலாமை 30 கிலோ எடைக் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில் கடலாமையை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை கடந்த ஆண்டில் கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கிய குறிப்பிடத்தக்கது.