கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி ; நால்வர் காயம்
மிஹிந்தலை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம் - கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி என்ற நபராவார்.
வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்து விபத்து
விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.