இலங்கையில் உள்ள தாமரை கோபுரத்தில் நிகழவுள்ள பாரிய மாற்றம்!
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் கியேட் டிசயின்ஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் இன்றைய தினம் (18-11-2022) முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு வலயம் ஒன்று தாமரை கோபுர வளாகத்தில் நிறுவப்படும்.
எதிர்வரும் 3 வருட காலப் பகுதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் கொழும்பின் தாமரை கோபுர பிரதேசமானது முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான மையமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்னும் பல பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும்' என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.