இலங்கையில் ஒரு லிட்டில் லண்டன்... மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் (13-01-2023) நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமகாலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுவதாக இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளர்.
மேலும், அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் ஏனைய பகுதிகளிலும் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.