மட்டக்களப்புக்கு சென்ற காரில் பெரும் தொகை போதைமாத்திரைகள்
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (11) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
அத்துடன், அவரிடமிருந்து 1440 மாத்திரைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினர் சோதனை
மட்டக்களப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு ரயில்வே குறுக்கு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வேளை வீதியில் பயணித்த இந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட கார் கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.