மகளின் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற ஒரு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொல்பிதிகம, தல்பத்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் பொல்பிதிகம வடுபொலயாய பகுதியைச் சேர்ந்த தினுஷிகா மதுவந்தி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர்பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே அவரின் கணவரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேக நபரான கணவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.