தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தரை மோதிக்கொன்ற கனரக வாகனம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்!
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் கனரகவாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்
பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரகவாகனம் மோதிதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் விபத்து தொடர்பில் கனரகவாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
You My Like This Video