அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு நீதிமன்றம் கடும் உத்தரவு
நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னர் வழங்கிய உத்தரவை மீறியதாகக் கூறப்படும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவியை , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தம்புத்தேகம நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.
ஐரங்கனி டி சில்வா என்ற பெண்ணுக்கே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்த பெண்
சந்தேகநபரான பெண், குருநாகல் மாஎலிய பிரதேசத்தில் எம்.கே. எக்ரோ இன்டர்ஸியல் எனும் பெயரில் முன்னெடுத்துச் செல்லும் விலங்குகளை பாதுகாப்பும் மத்திய நிலையத்தில், பராமரிக்கப்படும் விலங்குகளில் ஆறு பசு மாடுகளை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டதை அவர் நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் , தம்புத்தேகம நீதவான் இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய கட்டளையை மீறிவிட்டதாக, அமைச்சரின் மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இந்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.