வயோதிப பெண்ணை மோதிய கார்
பண்டாரகம, களுத்துறை வீதியின் யட்டியன பகுதியில் இன்று (13) காலை வீதியில் பயணித்த பெண் ஒருவர் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் அந்த பகுதியில் உள்ள வீட்டில் இரவு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
பண்டாரகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அதே திசையில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் கார் மோதியதில் 23 மீற்றர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஓரத்தில் விழுந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரத்தில் சாரதி காரை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரை ஓட்டிச் சென்ற 23 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துறை நீதநீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலை படுத்தவுள்ளார்.