மீண்டும் உருவாகும் முத்தையா 800: விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிக்கபோவது யார் தெரியுமா?
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவரது பயோபிக் படத்தை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக முடிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை, ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக தோனியின் வரலாற்று படம் சமீபத்தில் வெளியான கபில்தேவ் படம் போன்ற படங்கள் உள்ளன. அந்த வரிசையில் முத்தையாவின் பயோபிக் படமும் இடம்பற வேண்டும் என அவர் விரும்பினார்.
இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததை மையமாக கொண்டு அவரது பயோபிக் படத்தை உருவாக்க எண்ணினார்.
இதன்படி, அந்த படத்தில் அவர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிருந்தது.
இருப்பினும், இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவிற்கு (Rajapaksa's) ஆதரவாக இருந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்ததால் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார்.
இதையடுத்து விஜய்சேதுபதியை தவிர தனது பயோபிக்கிற்கு யாருமே சரியாக பொருந்த மாட்டார்கள் என்பதால் முத்தையா முரளிதரனும் தனது பயோபிக் படத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
இதே நிலையில் தற்போது குறித்த படம் மீண்டும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய்சேதுபதிக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் படேல் 800 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும், நடிகர் விஜய் சேதுபதி அளவிற்கு இவர் முத்தையா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதுதான் பலரின பொதுவான கருத்தாக உள்ளது. எனவே இது எந்தளவிற்கு அமையும் என்பது தெரியவில்லை.