பிரிந்துவாழும் கணவனை மீட்கச்சென்ற பெண்ணுக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!
குடும்ப பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் , தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
72 வயதான சந்தேகநபர் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. குருநாகல், கும்புக்கெட்டே பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைக்க பூஜை
தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம்பெண்ணொருவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, போதை பானத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்ததுடன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாந்திரீகம் செய்ய விரும்புவதாக கூறியதையடுத்து சந்தேக நபருக்கு பாதிக்கபப்ட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பெண்ணை பூஜை ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறி சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை பகுதிக்கு வருமாறு கூறி பெண்ணை தேவாலயம் அமைந்துள்ள வீட்டிற்கு அழைத்து சென்ற சந்தேக நபர், பூஜையில் மற்றவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
போதை கலந்த பானம்
எனினும் , இரவு வெகுநேரமாகியும் வேறு யாரும் வராததால், தான் செல்வதாக கூறி அப்பெண் குடிக்க தண்ணீர் கேட்டபோது, சந்தேக நபர் போதை கலந்த பானத்தை வழங்கிய நிலையில் அதனை அருந்திய பெண் மயக்கத்தில் உறங்கிவிட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் கண்விழித்த போது நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக பெண்ணின் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைதான , போலிச்சாமியார் 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.