வவுனியாவில் பிரபல சுப்பர் மார்க்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் தனிமைப்படுத்தலில்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக பிரபல சுப்பர் மார்க்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.
வவுனியாவில் கோவிட் பரவல் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படிருந்தது.
இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
அந்தவகையில், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட், தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் சுப்பர் மார்க்கட் ஒன்று, ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்கள் இவ்வாறு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டன.