ஒரே நாளில் 47 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, தலைமன்னார் கடற்பரப்பில் 4 படகுகளுடன் 30 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு படகுடன் 17 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக, 47 பேரும், கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.