கொரோனாவிலிருந்து குணமடைந்த 4 குழந்தைகள் மரணம்....எச்சரித்த வைத்தியர்கள்
கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகள் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் "மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்" என்ற கொடிய நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நோயானது குழந்தைகளின் உடல் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்கு பின்பே ஏற்படுகிறது.
இந்த நிலையில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 78 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த தெரிவித்தார்.