தப்போவ சரணாலயத்தில் வேட்டையாடிய 4 பேருக்கு நேர்ந்த கதி!
புத்தளத்தில் உள்ள தப்போவ சரணாலயத்தில் வேட்டைக்குச் சென்ற 4 பேர் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் நேற்றைய தினம் (05-10-2023) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பிரிகஸ்வெவ பகுதியில் வேட்டைக்குச் சென்ற 4 பேர் வில்பத்து வன விலங்கு அலுவலகத்திற்கு உறித்தான நீலபெம்ம வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 3 ரவைகள் கத்திகள் மின்விளக்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வேட்டையாடிய மான் இறைச்சி மற்றும் எறும்புண்ண இறைச்சிகளும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் பகல புலியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களென வனவிலங்குகள் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் புத்தளம் நீதிமன்றில் இன்று ஆஜர்படுப்பட்டனர்.
ஒவ்வொருவொருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணைப்படி நால்வருக்கும் 4 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.