சிவனொளிபாத யாத்திரைக்கு வந்த 322 பேர் கைது
இவ்வருட ஸ்ரீபாத யாத்திரை பருவம் ஆரம்பித்தது முதல் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருட்களை அங்கு கொண்டு சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேனை மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதன்போது 336 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் மூலம் 20 இலட்சத்து 65,000 ரூபா அபராதப் பணமும் அறவிடப்பட்டுள்ளதாககவும் தெரிவித்துள்ளது.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனைகளின் போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா, ஹேஷ் , குஷ் , மாவா, மதன மோதகம் ஆகிய போதைப்பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.