திருகோணமலையில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூவருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை ஜன சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று மாலை (04-03-2023) இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் அடிப்பாகத்தில் 15 அடி வரை தொண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு ஒரு மண்வெட்டி ஒரு சுத்தியல் ஒரு பிளாஸ்டிக் வாளி, கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மல்டி வயரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.