2வது டி20 போட்டி; கேப்டன் ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்!
இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்வை அடுத்து அவர் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டதுடன், அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை மேற்கொண்டதில் வெளியான ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று ஆனதையடுத்து நிம்மதியடைந்தனர்.
ஆனாலும் அதற்குள் இவர்கள் களமிறங்கி ஆடுவது சரியாகாது என்பதால் இந்த 8 வீரர்கள், ஷிகர் தவான் உட்பட இன்று களமிறங்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, செகல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, கிருஷ்ணப்பா கவுதம், இஷான் கிஷன் ஆகியோர் குருணாலுடன் நெருக்கமாக இருந்த வீரர்களாவர்.
எனவே இன்று முற்றிலும் புதிய இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதன்படி புவனேஷ்வர் குமார் கேப்டன்சியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சாகர், தீபக் சாகர், குல்தீப் யாதவ், சக்காரியா, வருண் சக்ரவர்த்தி என்று புது வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.