சுவிஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை: திடுக்கிட வைக்கும் எண்ணிக்கை
சிவிஸின் கணவரால் 30 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யபட்ட நிலையில் சுவிஸில் இந்த ஆண்டு மட்டும் 23 பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சூரிச் கொலை தொடர்பில் 46 வயதான துருக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த நபர் தொடர்பில் பொலிசார் ஏற்கனவே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை கடந்த ஜூன் மாதத்தில் மிரட்டல் விடுத்ததாக கூறி இவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்து. இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் Glarus பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்மணிக்கும் இந்த இளைஞருக்கும் என்ன உறவு என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இதுவரையில் சுவிஸில் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதுவரை 23 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 8 பெண்கள் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.