22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி
கண்டி தெல்தெனிய, ரங்கல, உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, ரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ரங்கல காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தோண்டி எடுத்துள்ளனர்.
ரங்கல காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம காவல் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட நீதவான் விசாரணை
தோண்டி எடுக்கப்பட்ட சடலம், உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியில் வசித்துவந்த வீரசேகர முதியன்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி (வயது 22) என்ற யுவதியுடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்ற தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜயதிலக்க, முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
சம்பவம் தொடர்பான மேலதிக மரண பரிசோதனைகளை தெல்தெனிய மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அதுகுறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.