ஜனாதிபதி அனுரவின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2வது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைத்தார்.

தமிழரசு கட்சி கலந்துக்கொள்ளவில்லை
இன்றைய தினம் வரையில் அது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டதுடன் சற்றுமுன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட து. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதேவேளை இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி கலந்துக்கொள்ளவில்லை.