அரச சேவையில் மேலும் 2003 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு ; அமைச்சரவை அனுமதி!
இலங்கை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட அலுவலர் குழுவின் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை மூலம் 11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 5 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் 2003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்குறித்த விதந்துரையை அமுல்படுத்துவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.