கடற்றொழிலுக்கு சென்ற 2 மீன்பிடி படகுகள் மாயம்
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 2 மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த 7ஆம் திகதி புறப்பட்ட படகுகளே காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் பெருந்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நீண்டதூர மீன்பிடி படகில் 4 மீனவர்களும், ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் இரண்டு மீனவர்களும் பயணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த மீனவர்களை தேடும் பணியை கடற்படையினர் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.