தவறான தகவல் பரப்பினால் 15 ஆண்டு சிறை: ரஷ்ய அதிரடி
உக்ரைனில் ராணுவ நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை பரப்புவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டவுடன், அது சனிக்கிழமை ( சட்டமாக மாறும் என்று ரஷ்ய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் வியாஸ் விளாடிமிர் ஓலோடின் கூறினார். ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குப் பின்வாங்கிவிட்டதாக ரஷ்யாவில் இருந்து செயல்படும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ரஷ்ய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரஷ்ய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியை ஒளிபரப்பிய பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா உள்ளிட்ட ஐந்து ஊடகங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் போர் குறித்து தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.