கொழும்பில் ஒவ்வொரு வாரமும் உயிரிழக்கும் 15 பேர்! வெளியான அதிர்ச்சி காரணம்
கொழும்பில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் 15 மரணங்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே மக்கள் கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.