விபத்துகளால் வருடாந்தம் 12000 பேர் உயிரிழப்பு
நாட்டில் பதிவாகும் பல்வேறு விபத்துகளினால் வருடாந்தம் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு விபத்துகளால் வருடாந்தம் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அவசர விபத்துகளினால் வருடாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12000 இற்கும் அதிகமானதாக காணப்படுவதாக அவர் கூறினார்.
மேலும் இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 9 மாகாணங்களையும் உள்ளடக்கி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.