கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்; விசாரணக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பொலிஸார்
கொழும்பில் மாலைதீவு இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கைக்கு வந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட மாலைதீவு இளைஞர் அவ்ஹாம் நசீர் சனிக்கிழமை வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மாலைதீவு பொலிஸாரும் இது குறித்த விசாரணைகளில் தீவிரம் காட்டுகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைக்களுக்குக்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அடங்கிய மாலைதீவு குழுவொன்று இலங்கை புறப்பட்டுள்ளது. இரண்டு உடல்களும் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்று அவ்ஹாம் நசீர் உடையது என உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள், விசாரணைகள் குறித்து தங்களிற்கு எந்த விபரமும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் மீட்கப்பட்ட சடலங்களில் காயங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் மாலைதீவைச்சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாலைதீவு பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பான அமைப்புகளுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.