யாழில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த இளைஞனால் அல்லோலகல்லோலம்!
யாழில் தென்மராட்சி பகுதியில் நள்ளிரவில் குடும்பப் பெண் வீட்டுக்குள் நுழைந்த இளைஞனால் அல்லோலகல்லோலம் ஏற்பட்டதுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று சில தினங்களின் முன்னர் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
கணவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நிலையில், 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த 37 வயதான பெண்ணொருவரின் வீட்டுக்குள் அயல்வீட்டில் வசிக்கும் 27 வயதான இளைஞனே புகுந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வீட்டுக்குள் தவறான நோக்கத்துடன் இளைஞன் நுழைந்ததை அவதானித்த பெண், அவரை பலமாக தாக்கிய நிலையில், அப்பெண் கொடுத்த அடியில் அவருக்கு “பத்து“ போடும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதாக கூறப்படுகின்றது.