சூட்கேசில் பெண்ணின் சடலம்...தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா?
சேலத்தில் பெண் ஒருவர் சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி குமரசமிபாட்டி பகுதியை சேர்ந்தவர் தான் பிரதாப். இவரது மனைவி தேஜ்மண்டல். இந்த பெண் சேலம் மாநகரில் சங்கர் நகர் பெர்லைன்ஸ்ப் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். கணவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வேலை விடயமாக வெளியூர் சென்ற பிரதாப் மனைவியை தொடர்பு கொண்டபோது அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை. இதனால் கட்டிட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற கட்டிட உரிமையாளர் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவைக்கப்பட்டது.
அதன்போது பொலிஸார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சூட்கேஸ் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணையை நடத்தினர்,
அப்போது கொலை செய்யப்பட்ட பெண் வீட்டின் அருகே உள்ள அறையில் இருந்த ஆண்,பெண் இருவர் தேஜ்மண்டல் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்றதும், பின் அரைமணி நேரத்திற்கு பின் வெளியே வந்ததும் அங்கிருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
பின் அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக இருவர் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.