நாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியான எச்சரிக்கை தகவல்
தற்போது இருக்கும் சூழ்நிலையில், தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்ந்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் நாட்டில் தற்போதைக்கு அவ்வாறான ஓர் தேவை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா பரவும் நிலைமை மோசமடையாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
நாட்டில் கொரோனா மரணங்களில் ஏற்றம் - இறக்கம் நிலை காணப்படுகின்றது. அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஓமிகோர்ன் வைரஸ் நாட்டிற்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வு கூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது. தென் ஆபிரிக்காவுடன் நேரடியான விமான போக்குவரத்து சேவை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.