ஐரோப்பா மக்களுக்கு WHO விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!
ஐரோப்பாவில் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு Omicron பாதிப்பு ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது,
டெல்டா வகை வைரஸ் பரவலை விட Omicron வைரஸ் வேகமாக ஐரோப்பாவில் பரவுகிறது. அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் ஐரோப்பாவில் மக்கள் தொகையில் பாதி பேர் ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டின் (2022) முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதின் அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா வகை வைரஸை சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட Omicron பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது.