இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டின் முன்னால் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவர் பொது மகன் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைத் தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு - துப்பாக்கிச் சூட்டை அடுத்து மக்கள் ஒன்றுகூடியதால் பதற்றநிலை!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று மாலை வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அன்ஹ்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.