தமிழகத்தில் MLAவாக பதவி வகிக்கும் இலங்கையர்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த 15 வருடமாக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வந்த கூடலூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றியுள்ளார் பொன் ஜெயசீலன். மேலும் இவர் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை.
இலங்கையில் மலையக பகுதியில் பிறந்து சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் இருந்து அன்று மலையகத்திற்கு தோட்ட தொழிலாளர்களாக இங்கிருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் காபி தோட்டத்திற்கு வேலைக்காக அழைத்து சென்றுள்ளனர், பின்னர் காபி புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அங்கு மேலும் காபி பயிர் இல்லை என்பதால் தோயிலை தோட்டம் உருவாக்கப்பட்டது.
இதேவேளை தோயிலை தோட்டத்திற்கு வேலை பார்ப்பதற்காக இங்கு இருந்து மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஆங்கிலேயர்கள் மலையகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்படி சென்ற குடும்பத்தில் இருந்து பிறந்தவர்தான் நான் என்று பொன். ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.