சீனாவின் செயற்பாடு கவலை அளிப்பதாக தெரிவித்த அமெரிக்கா!
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா நடந்து கொள்வது கவலை அளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலர் ஜென் பெசகி நேற்று (11-01-2022) கூறியதாவது,
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவது கவலை அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் இவ்வாறான செயல் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் மாத்திரமின்றி உலகளவில் ஸ்திரமற்ற சூழலுக்கு வழிவகுத்து விடும்.
இவ்வாறான சூழலில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும். இந்திய - சீன எல்லை நிலவரத்தை அமெரிக்கா கூர்ந்து கண்காணித்து வருகிறது.
இரு தரப்பு பேச்சு வாயிலாக எல்லைப் பிரச்னைகளை தீர்க்க அமெரிக்கா ஆதரவளிக்கும், ஜென் பெசகி தெரிவித்துள்ளார்.